மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பாலம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தெரிவித்தார்.
சிரேஷ்டகாவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கா வின் ஆலோசனைக்கமைய சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்காக அதில் ஈடுபடுவேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை ஒன்று மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி கே.பி. பண்டார தலைமையிலான காவற்துறை குழுவினர் இன்று அதிகாலை மரப்பாலம் ஆற்று பகுதியினை சுற்றிவளைத்தனர்.
இதன்போது சட்டவிரோதமாக ஆற்றில் இருந்து உழவு இயந்திரத்தில் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததுடன் 4 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கரடியனாறு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி
