வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா தவசிகுளம் பகுதியில் நேற்றையதினம் (13.06.2021) இடம்பெற்ற திருமண நிகழ்வொன்று சுகாதார பிரிவினர் 15 உறவினர்களுடன் நடத்துமாறு அனுமதி வழங்கியிருந்தனர்.
எனினும் குறித்த திருமண நிகழ்விற்கு 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து நேற்றையதினம் மதியம் குறித்த திருமண வீட்டிற்கு சென்ற சுகாதார பிரிவினர் எச்சரிக்கை வழங்கியிருந்தனர்.
எனினும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறையினை மீறி செயற்பட்ட மணமக்கள் உட்பட அவரின் வீட்டார் நேற்று மாலை சுகாதார பிரிவினரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் திருமண நிகழ்வின் புகைப்படம் பிடிப்பாளரின் உதவியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்வதற்குறிய நடவடிக்கையும் சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் குறித்த திருமண நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமிய
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த