தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறையின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
48 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வண்டியிலிருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்த உப காவல்துறை அதிகாரியும் காவல்துறை பரிசோதகரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
