அவசர தேவை ஏற்படின் சுகாதார பிரிவினர் கடமையாற்ற வேண்டும் – சமன் ரத்னபிரிய
Jun11
அவசர தேவை ஏற்படின் சுகாதார பிரிவினர் கடமையாற்ற வேண்டும் – சமன் ரத்னபிரிய
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு அவசர தேவை ஏற்படின் அதற்காக கடமையாற்றுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.