மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (8) ஆரம்பித்து வைக்க்கட்டுள்ளது. இதில் இன்று 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ந. மயூரன் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இதில் மண்முணைவடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், காவற்துறை உத்தியோகத்தர்களும் உள்ளிட்ட 750 பேருக்கு இன்று இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த தப்பூசியை ஏற்ற உத்தியோகத்தர்கள் முந்தியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.



யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
