பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் இன்று நாடுதளுவிய ரீதியில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் கொரோனா தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 12:30 வரையும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்ட இடத்திற்கு வருகைதந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறித்த பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போது இவர்களினுடைய போராட்டம் நியாயமானது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியுடனான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுத்து நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.


மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
