More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!
தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!
Jun 02
தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதியில் இருந்து போலீசார் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.



கடந்த 52 நாட்களில் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 12 லட்சத்து 9 ஆயிரத்து 584 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



இதில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 282 பேர் சிக்கி உள்ளனர். வடக்கு மண்டலத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 77 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 2 லட்சத்து 1,633 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



மத்திய மண்டலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 530 பேர் சிக்கியுள்ளனர்.



சென்னைக்கு வெளியே உள்ள நகரப்பகுதிகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 52 நாட்களில் நகர்புறங்களில் முக கவசம் அணியாமல் சுற்றிய 2 லட்சத்து 44 ஆயிரத்து 362 பேர் பிடிபட்டுள்ளனர்.



நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 749 பேர் தமிழகம் முழுவதும் சிக்கி இருக்கிறார்கள்.



இதே போன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத குற்றத்துக்காக 60 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. நேற்று ஒரே நாளில் 1,296 வழக்குகளும், நேற்று முன்தினம் 1,552 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.



சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடர்பாக தெற்கு மண்டலத்தில்தான் அதிக வழக்குகள் போடப்பட்டுள்ளது. அங்கு 14,838 வழக்குகள் பதிவாகி உள்ளன.



சென்னையிலும் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 5,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,596 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.



முக கவசம் அணியாமல் சுற்றிய 3 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத 247 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Feb17

பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்

Dec31

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட

Mar15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,

Apr01

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு

Jun01

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம

Feb10

இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி

Mar08

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த

Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

Jun28
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (21:02 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (21:02 pm )
Testing centres