தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. ஆனால் மற்ற மாநிலங்களில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து கட்சியை மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பரிந்துரைகளை வழங்க மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையில் ஐவர் குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்திருந்தார்.
அந்த குழு தேர்தல் தோல்வி குறித்து அறிக்கையை சோனியா காந்தியிடம் நேற்று வழங்கியது.
இதுகுறித்து அசோக் சவான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அந்த மாநிலங்களில் கட்சியை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தல் தோல்வி குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன’ என்று தெரிவித்தார்.
இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
நாடாளுமன்ற மழைக்காலக்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
