கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந்து வருகிறது. குறிப்பாக மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
நேற்று புதிதாக மும்பையில் 1,362 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மும்பையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 1,266 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதேபோல 1,021 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர்.
இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 446 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதேபோல மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 34 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நேற்று தான் மும்பையில் குறைந்த அளவு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கடைசியாக ஏப்ரல் 13-ந் தேதி 26 இறப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இதுவரை 14 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நிதி தலைநகரில் 27 ஆயிரத்து 943 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோயில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94 ஆக உள்ளது.
தற்போது நகரில் 44 கட்டுபாட்டு மண்டலங்கள் உள்ளன. மேலும் 200 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இ
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்
வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க
2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த
தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
