நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணப் பொலிசார் மற்றும் இலங்கை விமானப் படையினரும் இணைந்துரோன் கேமராவில் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
யாழ்ப்பாண நகரம் நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் விமானப்படையின் ரோன் கேமராக்களில் உதவியுடன் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணி்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
விமானப்படையின் ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடமாடும் பொதுமக்கள் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெரனான்டோ தலைமையிலான பொலீஸ் மோட்டார் சைக்கிள் படையணியினரால் கைது செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்
மேலும் நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பயணத்தடையின் போது அத்தியாவசிய தேவை தவிர்ந்த வேறு எவரும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் அவ்வாறு பயணிப்போர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் தற்போது நாட்டில் தீவிரமாக பரவி பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாண மாவட்டத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
