More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தளர்வற்ற ஊரடங்கு- சென்னையில் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!
தளர்வற்ற ஊரடங்கு- சென்னையில் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!
May 24
தளர்வற்ற ஊரடங்கு- சென்னையில் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் 20 ஆயிரம் போலீசார் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியை செய்து வருகிறார்கள். அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் தகுந்த சான்றிதழ், அடையாள அட்டைஇருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 



ஆன்லைன் மூலம் உணவு வினியோகம் செய்வோர் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேவை இல்லாமல் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்பதால் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால், இன்று அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.



சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை வெறிச்சோடியது. மக்கள் நடமாட்டம் அலைமோதும் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களும், கோயம்பேடு மார்க்கெட், கொத்தவால் சாவடி ஆகிய இடங்களும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.



வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். வாகன சோதனையும் தீவிரமாக நடந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



ஏற்கனவே 205 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர வாகனங்களிலும் போலீசார் கண்காணித்து வந்தனர். இன்று இவை மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.



ஊரடங்கை கடுமையாக்குவதற்காக ‘டிரோன்’ மூலமும் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகரின் பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய

Sep29

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Mar09

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Sep07

இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன

Mar30

ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன

Feb05

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட

Jan25

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ

Jan15

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.

May26

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த

Jun21

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:03 am )
Testing centres