கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேற்று முக கவசம் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஜோ பைடன் கூறுகையில், இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு சிறப்பான தினம். ஏராளமான அமெரிக்கர்களுக்கு இவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றிகளால் இது சாத்தியமானது’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் மிக மிக குறைவாகவே இருக்கிறது. எனவே முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை. ஆனால் 2 டோசும் போட்டு முடிக்காதவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48)
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
தாலிபான்கள், இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை நட
உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந
