நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம், ஊா்க்காடு - சாட்டுபத்து சாலையில் ஊா்க்காட்டைச் சோ்ந்த இளைஞா்கள் அமா்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக குளித்துவிட்டு வந்த மற்றொரு பிரிவினா் அங்கிருந்த இளைஞா்களின் மோட்டாா் பைக் மீது மோதியதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு பிரிவினரும் வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்
