இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவி புரிந்து வருகின்றன.
அந்த வகையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இந்தியா பெற்ற உதவிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஏப்ரல் 27 முதல் மே 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 13,496 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 11,058 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், 7,365 வென்டிலேட்டர்கள் மற்றும் சுமார் 5.3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உலகளாவிய உதவியாக பெறப்பட்டது.
குறிப்பாக மே 14 மற்றும் 15-ந்தேதிகளில் கஜகஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 500 வென்டிலேட்டர்கள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 40 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் மற்றும் முககவசங்கள், கவச உடைகள் பெறப்பட்டன. உலகளாவிய உதவியாக பெறப்பட்ட இந்த வளங்கள் அனைத்தும் தரைவழியாகவும் விமானங்கள் மூலமாகவும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி