தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கடந்த மார்ச் 27-ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. 5 மாநிலங்களில் உள்ள 18 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வெவ்வேறு கட்டங்களாக நடந்த தேர்தல்களில் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கேரளாவில் இடதுசாரி கட்சியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன.
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் போட்டியிட்டன.
ஏப்ரல் 6-ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.
, கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.
இந்நிலையில், அசாம், கேரளா, புதுச்சேரியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா
சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&
