கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். திமுக ஆட்சி என்றழைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி தொழில் அமைதி மட்டுமே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி திமுக பாடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நேப்பியர் பூங்கா மே தின பூங்கா என்று போற்றப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்&
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்
நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட
