வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவில் பிடிபட்டார். பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோட்டா ராஜன், 24-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின.
இந்த பரபரப்பான நிலையில், அவரது மரண செய்தியை திகார் சிறை நிர்வாகம் மறுத்தது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் கூறுகையில், ‘‘சோட்டா ராஜன் உயிரிழந்ததாக பரவி வரும் செய்தி தவறானது’’ என்றார்.
மும்பை குண்டுவெடிப்பு சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த சோட்டா ராஜன் பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனக்கென ஒரு தாதா சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
