தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் மரியோ மியோனி (வயது 56).
இவர் நேற்று முன்தினம் அர்ஜென்டினாவின் மத்திய பகுதியில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டசுடன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைநகர் பியூனஸ் அயர்சின் ஜூனின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
சான் ஆண்டிரஸ் டி கில்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மந்திரி மரியோ மியோனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது அரசாங்கத்தின் போக்குவரத்து மந்திரியான மரியோ மியோனியின் மரணம் குறித்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு முழுமையான, அயராத, நேர்மையான அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம். அவர் ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருந்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மந்திரியின் கார் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீ ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே 2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் ப "மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில இலங்கைக்கு இந்தியா 5 லட்சம் ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனகா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர
