தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் மரியோ மியோனி (வயது 56).
இவர் நேற்று முன்தினம் அர்ஜென்டினாவின் மத்திய பகுதியில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டசுடன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைநகர் பியூனஸ் அயர்சின் ஜூனின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
சான் ஆண்டிரஸ் டி கில்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மந்திரி மரியோ மியோனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது அரசாங்கத்தின் போக்குவரத்து மந்திரியான மரியோ மியோனியின் மரணம் குறித்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு முழுமையான, அயராத, நேர்மையான அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம். அவர் ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருந்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மந்திரியின் கார் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
