தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் மரியோ மியோனி (வயது 56).
இவர் நேற்று முன்தினம் அர்ஜென்டினாவின் மத்திய பகுதியில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டசுடன் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைநகர் பியூனஸ் அயர்சின் ஜூனின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
சான் ஆண்டிரஸ் டி கில்ஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மந்திரி மரியோ மியோனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது அரசாங்கத்தின் போக்குவரத்து மந்திரியான மரியோ மியோனியின் மரணம் குறித்த செய்தி எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு முழுமையான, அயராத, நேர்மையான அரசியல்வாதியை நாம் இழந்துள்ளோம். அவர் ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருந்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மந்திரியின் கார் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு
அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாக
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து
