டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
இந்தியாவில்
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயத ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல