டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் டெல்லியில் மாத்திரம் 25 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.
அந்த அறிவிப்பில், “டெல்லி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துவிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே உள்ளன.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.
திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று
பிக்பாஸ் பிரபலம்
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற் இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந பெரும்போகம்
