திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ரெயில் நிலையம் முன்பு வந்தார்.
அப்போது அவர் தலைமையில் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையறிந்த சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார். கல்வீச்சில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.
சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் திடீரெனச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமசர பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சியினர் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ர
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற
ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த
ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி
