கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். தெற்கு டெல்லியில் ஒரு மதுக்கடையில் நின்றிருந்த ரவீந்தர் சக்சேனா என்பவர் 8 பாட்டில்கள் வாங்கப்போவதாக கூறினார்.
வரிசையில் காத்திருந்தபோது சிலர் வரிசையை மீறி முன்னால் செல்ல முயன்றதால் வாக்குவாதமும் ஏற்பட்டது. 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மது பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, மதுபான நிறுவனங்களின் சங்கம், மராட்டியத்தை போல் டெல்லியிலும் மதுவை வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள
ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
