More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!
Apr 19
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டம்!

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.



வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,



கடந்த 70 நாட்களாக நாம் எமது கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பத்தற்கு அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ முன்வரவுமில்லை ஆர்வம் காட்டவுமில்லை.



ஶ்ரீநகர் கிராமம் உருவாகி இந்த வருடத்துடன் 26 வருட காலம் கடந்தும் எமது மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கல், வீடு அற்றவர்களுக்கு வீட்டுத்திட்ட உதவி, சீரற்ற வீடுகளை திருத்தம் செய்ய நிதி உதவி, பொது நோக்கு மண்டபம் ,முன்பள்ளி கட்டமைப்பு போன்ற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.



குறித்த கோரிக்கைகளை முன் வைத்துகடந்த 70 நாட்களாக எமது கிராமத்தில் நாம் போராடி வருகின்றோம். இதனை நிறைவேற்றித்தருவதாக பிரதேச செயலாளர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கியதுடன், எமக்கு 14நாட்களுக்குள் இந்த கோரிக்கைகளில் முதற்கட்டமாக அலைகரைப்பகுதி காணிப்பிரச்சினை மற்றும் விளையாட்டு மைதானப் பிரச்சினைகளை முடித்துத் தருவதாக கூறினார். எனினும் இன்று 70 நாட்கள் ஆகியும் எமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்துள்ளோம்.



வவுனியா குளத்தினை நிரவி வியாபாரத்திற்காகவும், சுற்றுலாத்துறைக்காகவும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் 26 வருடங்களாக நிரந்தர வீடுகள் அமைத்து வசித்துவரும் எமக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு ஏன் அதிகாரிகள் பின்னடிக்கின்றார்கள். நாமும் இந்த மாவட்டத்தின் சாதாரண மக்களே. எனவே இதையும் அரச அதிகாரிகள் கண்டு கொள்ளாத பட்சத்தில் எமது போராட்ட வடிவத்தை வேறுபட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருப்போம் என்றனர்



நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன், ஶ்ரீநகர் மக்கள் மனிதர்கள் இல்லையா, காணி உறுதிபத்திரத்தை வழங்கு, 26 வருடங்களாக எம்மை ஏமாற்றுவது சரியா, நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்வு என்ன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்

Oct13

எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக

Mar27

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட

Jan25

மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச

Jul17

ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க

Jul18

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Feb13

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ

Aug16

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த

Oct01

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய

Sep29

இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச

Jul14

பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற

Feb27

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு

May31

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி

Jan12

 ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:58 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:58 am )
Testing centres