மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பானிஹாதி தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிக்காத ஒரு குண்டை கைப்பற்றினர்.
உள்ளூரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரசார் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. ஆத்திரமடைந்த பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதல்பற்றி பாஜக வேட்பாளர் சன்மோய் பானர்ஜி கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைவது தெரிந்துவிட்டதால் திரிணாமுல் காங்கிரசார் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள், என குற்றம்சாட்டினார்.
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம்
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள