அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அங்கு தொடர்ந்தும் அரங்கேறி வருகின்றன.
இதற்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
