அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்ரோட்ஸ் என்கிற பிரபலமான வணிகவளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் வணிக வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக் கொண்டது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
இதனிடையே துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டி உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
