அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்ரோட்ஸ் என்கிற பிரபலமான வணிகவளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் வணிக வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக் கொண்டது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
இதனிடையே துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெர
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
