More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முழுவீச்சில் ஏற்பாடுகள்!
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு  முழுவீச்சில் ஏற்பாடுகள்!
Apr 06
வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முழுவீச்சில் ஏற்பாடுகள்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.



தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முடிந்தவுடன், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும்.



சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் ஆகும்.



சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்), திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி கல்லூரி மையத்திலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரி மையத்திலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் வைக்கப்பட உள்ளது.



இந்த 3 மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.



வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பூட்டுபோட்டு ‘சீல்’ வைக்கப்படும். அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், ஆயுதப்படை போலீசாரும் ‘ஷிப்ட’ முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.



வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ

Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Jul14

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள

Feb05

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு

Jul21
Mar03

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Sep16

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண

Apr07

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Jul17

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த

Apr03

ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம

Sep16

 ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (22:53 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 01 (22:53 pm )
Testing centres