உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 28 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,672கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 3ஆயிரத்து 479ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 23,777 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,196பேர் ஆண்கள், 1,476 பெண்கள், தமிழகத்தில் 260 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 11 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,789 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,842பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 66ஆயிரத்து 913ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
தமிழகத்தில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என அதிமுக ஒ உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
