அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்து பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் கார் ஒன்று பாதுகாப்பு தடுப்புகளை மோதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது.
உடனடியாக பாதுகாப்பு போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அதிலிருந்து இறங்கிய வாலிபர், கத்தியால் அருகிலிருந்த போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.இதில், 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த வாலிபரை சுட்டுக் கொன்றனர். அவர், இண்டியானா மாகாணத்தை சேர்ந்த நோவா கிரீன் (25) என்பது தெரியவந்துள்ளது.
‘நேஷன் ஆப் இஸ்லாம்’ என்ற மதவாத அமைப்பை சேர்ந்த அந்த வாலிபர், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். காயமடைந்த போலீசாரில் வில்லியம் பில்லி இவான்ஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
