More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்
அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்
Apr 12
அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! – பங்காளிகளிடம் கோட்டா வேண்டுகோள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும்  சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசிலுள்ள எவரும் இதற்குத் துணைபோகக்கூடாது.என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.  



ஸ்ரீலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர். ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதால் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது என்றும், அரசு விரைவில் கவிழும் என்றும் எதிரணியினர் சிங்கள ஊடகங்களிடம் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி, மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-



அரசிலுள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால், அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகக்கூடாது.



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக  – பலம் மிக்க தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். பங்காளிக் கட்சிகள் தங்கள் குறைநிறைகளை அவருடன் நேரில் பேசித் தீர்த்துக்கொள்ள  முடியும்.



நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.



மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள். இது கடந்த கால வரலாறு.



எதிரணியின் சதி முயற்சிகளை நாம் ஓரணியில் நின்று தோற்கடிக்க வேண்டும் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப

Jun06

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர

Aug05

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்

Mar11

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Apr19

வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக

Mar09

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க

Feb01

ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்

Jul15

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ

Apr05

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றி

Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Oct04

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப

Sep16

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:49 am )
Testing centres