More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
Apr 12
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த 9-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசினர்.



இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.



அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கெண்டதாகவும் அதில் கூறியிருந்தது.



இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.



சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகளின்படி, எல்லையில் பதற்றத்தணிப்பு தொடர்பான தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.



இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்துள்ள 11-வது சுற்று பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



ஏனெனில் சீன அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்ட மனநிலையிலேயே கலந்து கொண்டதாகவும், எந்த வகையிலான நெகிழ்வுத்தன்மையையும் அவர்கள் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல

Oct23

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள

Aug01

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ

Jun01

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி

Aug22

நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்

May16

காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி

May08

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு

Mar07

ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக

Apr03

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த

Apr10

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்

Jan25

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை வி

Feb26

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி

Jun24
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (01:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (01:49 am )
Testing centres