ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரும் உயிரிழக்கின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 29ந்தேதி, அமெரிக்கா மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்பின்னர் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.
ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் நார் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் ஒன்றின் மீது தலீபான் பயங்கரவாதிகள் இரவு நேரத்தில் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 14 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலை மாகாண போலீசார் உறுதி செய்துள்ளனர். எனினும் தாக்குதல் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இந்த தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் அமைப்பினை சேர்ந்த யூசுப் அகமதி என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
குடல் பாதிப்புக்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி
