மறைந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டதில் சுமார் 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 10க்கும் குறைவானோர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
தான்சானியா அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. இவர் கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதய நோயும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 17-ஆம் தேதி மகுஃபுலி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து தான்சானியா நாட்டில் 14 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
மார்ச் 21-ஆம் தேதி உரு விளையாட்டரங்கில், மகுஃபுலியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு 45 பேர் பலியாகினர். 37 பேர் காயமடைந்தனர்.
கூட்டத்தில் சிலர், வெளியேறும் வாயில்கள் வழியாக நுழைய முயன்றதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 45 பேர் பலியானதாகவும், காயமடைந்த 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காவல்துறை அதிகாரி கூறியதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்க
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
