இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்த பாகிஸ்தான், நேற்று அதை திடீரென கைவிட்டது. ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கை இல்லை’ என்று கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் அறிவித்தது. கொரோனா ஊரடங்கின்போது பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு நிலவியதால், கடந்த 2020, மே மாதம் மருந்து இறக்குமதிக்கான தடையை மட்டும் நீக்கியது.
தற்போது, பாகிஸ்தானில் பருத்தி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், இந்தியாவில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சரான ஹமத் அசார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
பாகிஸ்தானின் பொருளாதார ஒத்துழைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இதை அவர் அறிவித்தார். ஆனால், இந்தியா இதற்கு எந்தவித கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவை பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடியது. இதில், இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்யும் முடிவை கைவிட முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சிரின் மஸாரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் வரையில், இந்தியாவுடன் எந்த வர்த்தக உறவையும் பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது,’ என்று தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
