ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ‘2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் சிரஞ்சீவி சுகாதார காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்,’ என அசோக் கெலாட் அறிவித்து இருந்தார்.
இதன்படி, இந்த திட்டத்தில் மக்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு பெற முடியும்.
இதன் மூலமாக, பொதுமக்கள் பணமின்றி இலவசமாக சிகிச்சையை பெறலாம். இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தானில் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து, பணமில்லா சிகிச்சையை பெற்று பயனடையுங்கள்,’ என கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்
