களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும்,பிணையில் விடுதலையான குறித்த நபரை காவல்துறையினர் தாக்கியதாக அவரது மனைவி தெரிவித்தார்.
சம்பவத்தில் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் வைத்தியசாலையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
