அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளார்.
அந்த வகையில், அமெரிக்காவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியை, ஜனாதிபதி ஜோபைடன் நியமனம் செய்தார். இந்த நிலையில் இவரது நியமனத்துக்கு செனட் சபை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 21-வது தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘உங்கள் அறுவை சிகிச்சை நிபுணராக பதவியேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னை வழிநடத்திய மற்றும் ஆதரித்த எனது குடும்பத்துக்கு இந்த நாள் நான் கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.
தொடர்ந்து அவர் ‘‘இந்த கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அனைவரின் பிடியிலும் நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும் நான் உங்களுடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன். அதோடு அறிவியலுக்கான குரலாக இருப்பதற்கும் மறு கட்டமைப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான பாதையில் நம் தேசத்தை ஆதரிப்பதற்கும் தேசத்தின் மருத்துவராக இந்த நிலையை ஏற்க தயாராக உள்ளேன்’’ எனவும் கூறினார்.
உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்
இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம்
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முத
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து
வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
ஏரோஃப்ளோட் விமானம்
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
