தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். அவர் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் அவருக்கு இந்திய ராணுவ வீரர்களின் பாராசூட் சாகசங்களை காட்டுவதற்காக ஆக்ராவில் நேற்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 30 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 650 படைவீரர்கள் கலந்து கொணடனர்.
இதில் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில், சுமார் 25 பாராட்ரூப்பர்கள், பாராசூட்டில் இருந்து குதித்து அசத்தினார்கள்.
இதே போன்று 80 பாராட்ரூப்பர்கள், 1,250 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டபோது, அவர்கள் தாவிக்காட்டினார்கள்.
இந்த சாகச நிகழ்ச்சிகளை தென்கொரிய ராணுவ மந்திரி சூ வூக் வியந்து பார்த்தார். அவருடன் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவேனயும் இந்த சாகசங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சூ வூக், இந்திய ராணுவத்தின் பாரா கள ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டார். இதுதான் 1950-களில் நடந்த கொரிய போரின்போது தென்கொரியாவுக்கும், ஐ.நா. அமைதிப்படையினருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
இந்தியாவுக்கு தென்கொரியா ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந் மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு
