பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரான்சில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்த அதிகாரிகள் அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், பிரான்சின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்த தடுப்பூசி குறித்து ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் வந்த பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்படும் எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
