கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு இதுவரை 26 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. மேலும் அங்கு கொரோனா வைரசின் 3-வது அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதனிடையே வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து மாகாண ஆளுனர்களுடன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார். மேலும் ஈஸ்டர் விடுமுறை நாட்களான ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் அறிவித்தார்.
5 நாட்களும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. தேவாலயங்கள் ஈஸ்டர் நிகழ்ச்சிகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் திகதி பொது
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
