அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து தற்போது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,500 , அரிசிஅட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, மக்களை நம்பியே அதிமுக உள்ளது; மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 சிலிண்டர் விலை இல்லாமல் வழங்கப்படும் . அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தரப்படும் என்று கூறிய நிலையில் இன்று அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டரும், வாஷிங் மிஷினும் அளிக்கப்படும் என்றார்.
இதனிடையே சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து ரூ. 835 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல
