More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை!
 பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை!
Mar 11
பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை!

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2007-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலேயே இதுவரை பேச்சுவார்த்தை நடந்து வந்தது.



இந்தநிலையில், முதல்முறையாக தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காணொலி காட்சி மூலம் இம்மாநாடு நடக்கிறது.

                                                        

இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கிறார்கள்.



இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜென் பிசாகி கூறியதாவது:-



இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளிகள் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு ஜோ பைடன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இது காட்டுகிறது.



இந்த கூட்டத்தில், பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலக சமுதாயம் சந்திக்கும் கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார பிரச்சினை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.



இவ்வாறு அவர் கூறினார்.



அதுபோல், டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.



அதில், ‘‘4 தலைவர்களும் பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, உலக பிரச்சினைகள் குறித்து விவாதித்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள்.



கொரோனாவை ஒடுக்குவதற்கான முயற்சிகள், பாதுகாப்பான, மலிவான கொரோனா தடுப்பூசிகளை கிடைக்கச் செய்வது, பருவநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.



இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. தெற்கு சீன கடல் முழுவதையும் சொந்தம் கொண்டாடுகிறது. இந்த பின்னணியில், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளும் நாளை ஆலோசனை நடத்துகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாக

Apr03

மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங

Mar17

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ

Mar07

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க

Apr05

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம

May10

இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி

May21

உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல

Mar14

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய

Mar10

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி

Apr12

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்

May26

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா

Jan26

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்

Sep09
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (02:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (02:08 am )
Testing centres