அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
15-ந் தேதி (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்கு கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலையே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். அ.ம.மு.க.விற்கு இந்தத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எங்களது கூட்டணி கட்சியினருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகளை அவர் பணியிடம் மாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது. சசிகலா அரசியலுக்கு மீண்டும் வருகைக்காக நான் வற்புறுத்துவேன்.
ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பண மூட்டைகளை நம்பி நிற்கிறது. ஒரு கட்சி, பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் அது எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும். இதுவரை ஆர்.கே.நகருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
அதிமுக ம
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ
