வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. இது வரும் 25-ந் தேதி முடிகிறது.
அவர் உள்நாட்டில் சிகிச்சை பெறலாம், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது ஜாமீன் நிபந்தனை ஆகும்.
தற்போது அவரது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.
இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசதுஸ்ஸாமான் கான் கமல் கூறுகையில், “வங்காளதேச தேசியவாத கட்சியின்தலைவர் கலீதா ஜியாவின் தண்டனையை ரத்து செய்து, விடுவிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதையொட்டி அவரது சகோதரர் சமீம் இஸ்கந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்” என தெரிவித்தார்.
இதனால் கலீதா ஜியாவின் தண்டனை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு அங்கு எழுந்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன
கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ
