அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்ல – சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திபின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தாமதப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வெலிக்கட சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை, கோட்டை மற்றும் கண்டி வாகன தரிப்பிட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சேவைகளை நிறைவேற்ற முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
