அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்ல – சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திபின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தாமதப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வெலிக்கட சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை, கோட்டை மற்றும் கண்டி வாகன தரிப்பிட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சேவைகளை நிறைவேற்ற முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வ
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
