More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்
Mar 08
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள்ளே இருக்கிறது.



இதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் ஆகிய பிரிவினருக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார். டெல்லி மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நடந்த மருத்துவ மாநாட்டில் பேசும்போது அவர் கூறியதாவது:-



கொரோனாவை இந்தியாவில் இருந்து வேரறுக்கும் சாத்தியக்கூறுகளை பார்க்கும்போது, கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் நாம் வெற்றி பெறுவதற்கு 3 வழிகளை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.



அதாவது தடுப்பூசி திட்டத்தில் இருந்து அரசியலை வேரறுக்க வேண்டும், தடுப்பூசிக்கு பின்னால் இருக்கும் அறிவியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், மக்கள் தங்கள் உற்றார்-உறவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.



பெரும்பாலான உலக நாடுகளைப்போல இல்லாமல், நாம் நிலையாக தடுப்பூசி வினியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். அவை அனைத்தும் சிறந்த செயல்திறன் மிக்கவை என நிரூபிக்கப்பட்டு உள்ளன. உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை ஒப்பிடுகையில், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் மிகவும் குறைவான பக்க விளைவுகளையே கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மருந்தகமாக தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்தவகையில் 62 நாடுகளுக்கு 5.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டு இருக்கின்றன.



உலக அளவில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்தான் போலியோவை தங்கள் நாடுகளில் ஒழிக்கவில்லை. இந்த 2 நாடுகளுக்காக ஒட்டுமொத்த உலகமும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது.



அதைப்போலவே உலகின் பிற நாடுகள் கொரோனாவை ஒழிக்கவில்லை என்றால், இந்தியாவும் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. இதனால்தான் தடுப்பூசியில் தேசியவாதத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.



ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் தொடர்ந்து கொரோனாவை பரப்பினால், நம் நாட்டில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. எனவே தடுப்பூசியின் ஒரு நியாயமான, சமமான வினியோகம் காலத்தின் கட்டாயம் ஆகும்.



இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Mar27

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ

Aug23

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர

Feb01

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப

May23

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர

May12

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ

Feb17

பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்

Jan06

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு

Sep19

மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Mar24

டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற

May28

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:26 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (09:26 am )
Testing centres