கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் மொகாதிசுவில் துறைமுகத்துக்கு அருகே உள்ள ஒரு ஓட்டல் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஓட்டலின் நுழை வாயிலின் முன்பு காரை நிறுத்தி வெடிக்கச் செய்தார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்
லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
