ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து பாரீஸ் வழியாக கடந்த 5-ந்தேதி டெல்லி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்த இந்திய பயணி ஒருவர் விமானம் கிளம்பியது முதலே விமானத்தில் அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அவரது முரட்டுத்தனமான செயல்களால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பெரும் அவதியடைந்தனர். இந்தியரின் அந்த செயலால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரை விமானத்தில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளால் நடுவானில் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த பயணியை அங்கே இறக்கி விட்டுவிட்டு விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. சோபியா விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்ட இந்திய பயணியை பின்னர் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்ட இந்திய பயணி குறித்த விவரங்களை ஏர் பிரான்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண
மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்
