விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைய உத்தரவின் படி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், கணினி மூலம் முதற்கட்ட பரிசோதனை குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், திருகோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்
விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத