நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.
அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்த 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பல மணி நேரம் இருப்பதற்காக வெளியில் இருந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் மாணவிகளை கடத்தி செல்வதை தடுக்க முடியவில்லை.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு 276 பள்ளி மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
