பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்கு அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினார்.
குறிப்பாக பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த பயணத்தையொட்டி, இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இ்ம்ரான்கான் அறிவித்தார். மேலும் இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.5.20 கோடி நிதியுதவியும் அறிவித்தார்.
இம்ரான்கான் பயணம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி இருந்தது.
மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சமீபத்திய கொரோனா ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையிலும் அந்த நாடு இலங்கைக்கு கோடிக்கணக்கான பண உதவி அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
